search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு வக்கீல் முறையீடு"

    சென்னை-சேலம் பசுமை சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார்.
    சென்னை:

    ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

    அப்போது வக்கீல் பாலு ஆஜராகி, ‘சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலை அமைப்பதற்கு மத்திய அரசின் கீழ் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரே, திட்டத்துக்கான நிலத்தை அரசு கையப்படுத்த வேண்டும். ஆனால், இந்த முறையை பின்பற்றாமல், நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நிலத்தை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக நான் தொடரப் போகும் வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும்’ என்ற கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, நீங்கள் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிக்கின்றோம் என்று கூறினர்.

    ×